பேட்டா ராப்

யாதும் ஊரே யாவரும் கேளீர் !

Tuesday, August 22, 2006

தாத்தோவ் ! தமிழ் தாத்தோவ் !



கலீஞ்சர் அய்யா ! கும்பிட்றேனுங்க,ஒங்கல அய்யானு கூப்பிட்றதா.....குருனு கூப்பிட்றதா....தாத்தானு கூப்பிட்றதானு ஒரே கொய்ப்ப்மா கீது தலீவரே.

ஏன்னா நீங்க என்ன எல்லா ஆங்கிள்ளயும் இம்ப்ரஸ் பண்ணீக்றீங்க சத்திய்ம் பண்ணி சொல்வேன் எங்க ஓணாலும்.

ஒண்ணு செய்றெ..ன் ஒங்கல தாத்தோவ் தமிழ் தாத்தோவ்னு கொஞ்சுண்டு ரைட்டோட கூவிக்கிறென் ரைட்டா..?

ஒங்கள அப்டி கூப்ட என்க்கு ரைட் கீது
ஏன்னா ஒங்க அர்சியல் அனுபத்த பாதி கயிச்சி அப்பால அத்ல்
கோ-ஆப்டக்ஸ் கண்க்கா டொண்டி பர்செண்ட் டிஸ்கோண்ட் குட்த்தா இன்னா வர்தோ அதான் எங் வய்சு...இங்க ஒங்க பேமிலிய கூப்டறது அய்கில்ல,இர்ந்தாலும் கொய்ச்சிக்கலனா ஒரு ஒதாரணத்துகு சொல்றென்..ஒங்க ஒதயநிதிய காட்டியும் ஒரு வய்சு கூட கொறச்சல்னு வெச்சுக்கொங்ளென்.

இப்ப நா தாத்தானு கூட்டது சரிதான்னே தாத்தா !

இன்னாப்பா நீ நான் தமிழினத்தலைவன்,என்ன தாத்தானு கூப்பிட்றேயே ஒங்க இஞ்சி மொர்ப்பா கொரல்ல நீங்க கேக்கற்து யென்கும் கேக்குது...ஆனா அந்த பட்டம் வாணாம் உட்றுங்க ஆமா கண்டிப்பா வாணாம் !

யென்க்கு தெரியு நீங்க அந்த பேர வாங்க எத்னிவாட்டி செத்து பொய்ச்சீங்க்னு..ஆனா அந்த பேரு இப்ப முன்சிபால்டி குப்ப தொட்டி ஆய்போச்சி..

நேத்து மொள்ச்ச காளான்,இன்னிக்கு பூத்த ஈசல்ல்லா'ம் அந்த் பேர்க்கு எல்ம்பு துண்ட பாத்த நாய் மாறி ஒட்றப்ப நீ எம்மாம்பெர்ய ஆளு அவுங்கூட நிக்கலாமா வேணாங்கய்யா அத்த வுட்ருங்க...

தமிழ் தாத்தாவ் !

எம்மாங் கெத்தா கீது தெரிய்மா?, நீங்ளே கூட்டுபார்ங்க வேணா..? உ.வெ.சாக்கு அப்பால ஒங்க்ளுக்குதா அந்த பேரே பிஃட்டு...

சரி சரி பில்டப்ப உட்டுட்டு நேரா மேட்டருக்கு வர்றென்..

நீங்க கொஞ்ச நாளிக்கு முன்னால செவாஜி அய்யாவுக்கு செலை தெர்ந்திங்க்ளே ஞாபகம் க்கீதா..!

அய்யெ...அய்யெ...,

நான் ஒரு டுபாக்குரு ஒங்க ஞாபக சத்திய ஒலகமெ மெச்சறபப நாங் இப்டி கேக்றென் பாரு டுபாக்குரு...மன்சிக்குங்க!

அந்த செலை மேட்ரு அய்யா...ஒங்க ஜிகிடி தொஸ்த்துக்கு இஸ்பெக்ட் பண்ணணுகூட நீங்க சொன்னாலும் என்கு மட்டும் மெய்யாலும் சொல்லுங்க
அதுக்குளள எல்கஷ்ன் மேட்டரும் கீதுதானே..

கெக்..கெக்..கே...! நீங்க படா சாணக்கியர்தான் !

அதான் ஒல்கத்துகே தெர்ஞ்ச வெஷயம்தான், ஆனா எம் மன்சுல பட்டத டபால்னு சொல்லிட்றென்,என்கு அந்த செல மேட்ரு சத்திமா புடிக்லைங்க....எங்கள மாதிரி ஏயபாயங்க மூணு வேள வயிரார துண்ண ஒலை வேக்க வழி சொல்வீங்க்னுதான் ஒட்ட போட்டோம்,ஆனா நீங்க வந்த நூறு நாள்லயெ ரெண்ட்டு செல வெச்சி கலக்கி பூட்டீங்க் போங்க.

கஞ்சி தொட்டி தெற்ந்த கவர்மெண்ட்ட காலி பண்ணுங்கனு நீங்க ஆத்தாவுக்கு ஆபோசிட் பால்டிக்ஸ அஞ்சு வர்ஷ்ம் பண்ணி ஆட்சி புட்ச்சிங்க சபாஷ் !

அதுல கூட கல்ரு டிவி,நெலம்னு எம்.ஜி.ஆர் கண்க்கா ஜிகினா பிராமிஸ் குட்த்து தத்தக்காபித்க்கானு வோட்டு வாங்கிட்டிங்க,வந்த வொட்னெ வெவசாய வரி தள்படி,அது இதுனு பட்டைய கெள்பிற்றீங்கனு பாத்தா,கபால்னு கண்ண்கி செலை மேல கான்சந்டேட் பண்ண பூட்டீங்க,

ஒரு கால்த்துல நீங்ளும்,ஒங்க ஆளுங்களும் வெச்ச செலைய,அந்த அம்மா எட்த்ததால திருப்பியும் அத்த அங்க் வெக்க்ணும்னு சின்ன புள்ளதன்மான ஈகோ ஒங்களுகு சர்யா?

கண்ணகி செலை முன்ன கால்த்துல ஒ.கே, ஏன்னா வோட்டு வாங்க தமிழ கடை பரப்பனப்ப லோக்கல் செண்டிமெண்டுக்கு கண்ணகிமா செலை வொர்க்கவுட் ஆச்சி,ஆனா இப்ப அந்த வோல்ட் ஸ்டைல் வூடு கட்ற மேட்ரு வேலைக்கு ஆவாது தலீவா !

ஆமா கண்ணகி செலை கலாச்சார சின்னமா ?

அது எப்டிங்கய்யா....?

ஊரு மேஞ்ச புருஷனுக்காக நாட்ட எரிச்சா அது கலாச்சார சின்னமாயிடுமா? அப்ப நம்ம கலாச்சாரம் இன்னா சொல்து, ஆம்ளை எப்டி வேணா போலாம்,ஆனா பொம்னாட்டி மட்டும் குட்டி போட்ட பூனை மாறி அவனெயெ சுத்திசுத்தி வர்ணும் அப்டித்தானெ,இது பொம்ணாட்டிங்ளெ அடிமையா காமிக்லையா தலீவ்ரே !

மெய்யாலும் சொல்லபோனா நம்ம நாட்டு பொம்னாட்டிங்க சுத்த தங்கம் ! ஏன் கண்ண்கியவிட பலதபா ஒஸ்தி,ஏன்னா அன்னாடம், பஸ்சு,ஆபிஸ்,கடைகண்ணினு ஆயிரம் காமக்கண்லயிர்ந் தப்பி என்னிக்கும் ஸ்டெடிதான்,அதான் தலீவரே கொஞ்சநஞ்சனா மய்ய பெய்து !

ஆனா இந்த ஆம்ளிங்க கீறாங்ளே....சைக்கிள் கேப்ல ஸ்டெப்னி வச்சிப்பான்ங்க,ஏன் நாங்கூட சமயத்துல ஸ்லீப் ஆயிடுவேன்,காலம் காலமா வர்ற பயக்க தோஷமில்லீய்யா தலீவ்ரே! ஆனா என் தன்லட்சுமி வுடாது,ஒரு லுக்குலேயே என் சபலத்த காலி பண்ணிடும்!

ஆம்பளதான் மோசம்னு சொல்ல ஆயிரம் ஒதாரணம் கீது தலீவ்ரே. ரொம்ப டீப்பா போனா பர்ஸ்னல் அட்டாக் ஆயிடும்,அதால அட்த்த மேட்ருக்கு தாவலாம்,இர்ந்தாலும் நான் இன்னா சொல்றேன்னா அந்த செலைக்காக நீங்க மெனக்கெட்டது வேஸ்ட் ஆப் டைம்மு!

இப்ப பயபடி செவாஜி அய்யா மேட்டருக்கே வர்றேன்,நீங்க செவாஜிக்கு மருவாதி பண்ண ஆச பட்டது தப்பே இல்லீங்க,நான் தப்புனு சொன்னா எங்காத்தாவே என்ன ரவுண்டு கட்டி அடிக்கும்,ஏன்னா அது அவ்ளோப்பெர்ய செவாஜி பேஃனு!

ஆனா மருவாதி பண்ண வெதம்தான் சரியில்லனு தோண்து! அம்மாம்பெர்ய கலீஞ்சனுக்கு திம்மாத்துண்டு செலை வெச்சா போதுமா?அவரு பேரு காலம் பூரா பேசறா மாறி ஒரு நடிப்பு ஸ்கோலு,அதுக்குள்ள எப்பயும் செவாஜியய்யா படம் பாக்றா மாறி ஒரு குட்டி தேட்டரு வச்சா எம்மாஞ் ஜோரா இர்ந்திர்க்கும் தெரிமா?நடிப்ப கத்துக்றவங்க,செவாஜியய்யா ரசிகர்ங்க எல்லார்க்கும் குஷியாயிருக்கும்.இதுக்குள்ள கூட அந்த செலய வெச்சிருக்க்லாம்,சும்மா 'நச்சு'னு இர்ந்திருக்கும்!

ஆனா இப்ப மாறி வச்சது வேஸ்ட்னு, நீங்க வர்ற பஞ்சாயித்து எலக்ஷன்ல கெலிக்க இத்த வெச்சி வூடு கட்றீங்க்னு எல்லாம் பேஸ்றாங்க தலீவரே,கொஞ்ச ரோஸ்னை பண்ணுங்க,

அப்பால இந்த சின்மாக்காறங்க மேட்ருக்கு வர்றென்.

கூத்தாடிங்க மேடைல மட்டுந்தான் ஆட்ணும்,மத்த நேரம் சராசரி மனுஸன் மாறி நடக்ணும்,இன்னும் கேட்டா மக்களோட மன்சு டால் அட்ச்சா இன்னா தெர்யுமோ அதான் கலிஞ்சன்,ஆனா அந்த காலந்தான் மாறி போச்சே...ஆட்சிக்கு வர்வங்ளுக்கு கூஜா தூக்கி பொய்ப்பு நட்த்தர்தே இப்ப பொய்ப்பா போச்சி...வாய்த்துக்க்ள் தலீவா! ஒங்களுக்கேத்த சினிமாக்கூட்டம் உங்களுக்கேத்தா மாறியே வந்திட்ச்சின்றது ஒங்க சுத்தி கேக்கற ஜிங்...ஜிங்...சத்ததிலேயெ தெரிது...வாய்த்துக்க்ள் !

நீங்ளும் குஷியாயி சும்மா சலுகிய பாரி மன்னன் கண்க்கா வாரி வாரி எற்ச்சிட்டீங்க,கண்ணீரில் தத்தளிக்கற கலயொலகத்துக்கு ஒங்க கைமாரு வேணானு சொல்லல,தேவபட்ற ஒதவிய தேவப்படும்போது பண்றதுதான் மெய்யாலுமே ஒதவி,ஆனா இந்த மேட்டர்ல நீங்க ஓவர் குஷில கொஞசம் ஓவராவே பண்ணிட்டீங்ளொனு தோண்து.

எல்லாம் செரி ஆனா தமிழ் வளர தமிழ்லெ பேர் வச்சா அத்க்கு வரி வெலக்குனு சொன்னீங்க பார்ங்க,அது மெய்யாலும் ஒவ்ரா தெர்ல? தலீவா பட்தோட டயிட்ல தமிழ்ல வெச்சா தமிழ் வளந்துடுமா?அய்யா அனுபவசாலி சொல்லுங்க..

நீங்க சொன்னதபாதான்,வெள்ளக்கார்னுக்கு பொற்ந்தவன் கண்க்கா பீட்ரு வுட்டுக்னு திரிஞ்சவன்லாம்
திடீர்னு தமிழ்ப்பால் குட்ச்சமாறி வாயோட வரி வெலக்காக வரிசியில நிக்றாங்கனு கேள்வி,ஆனா நெசம் இன்னானா இத்தால தமிழுக்கும் புண்ணியமில்லை! கெவர்மெண்ட்டு கஜானாவுக்கும் பைசா பேரல.

மெய்யாலுமே தமிழ் வளரும்னா ஒண்ணெஒண்ணு பண்ணுங்க ஒங்க ஸ்கொலு பிரண்ட் நன்னன் கீறாரே தமிழாசான்,அவுரு டிக் பண்ணாதான் சன் டிவில எந்த டய்லாக்கும் பேஸ்னும்னு கண்டீஷ்னா சொல்லிபூடுங்க தமிழ யாரும் வளக்க வாணாம் அதுவே சும்மா சுனாமி கண்க்கா ஒலகம் பூரா கலக்கிடும்.அத்த வுட்டுட்டு வரி வெலக்கு சீன்லாம் வாணாங்கய்யா!

நம்ம அமீர் கீறாரே அவுரு ஒரு சும்மா ரின்ல வெள்த்தா மாறி மன்சுகாரு,கெழவய்சு சின்மாக்காரங்க கூட எளமை ஓஞ்சலாடறதா சொல்லிகிட்டு பொண்ணுங்க்ளோட இடுப்பு அடுக்கயும்,மாரு மடிப்பியும் காட்டிக்னு திரியறப்ப இதுலாம் இல்லாம அய்கா ரெண்டு படம் கொட்த்துக்றாரு.அதுல ஒண்ணு கெய்ரோ நாடுவர போயி மால மருவாதிலாம் வாங்கியாந்திச்சி,அவருகிட்ட நம்ம ஜூனியர் விகடன்காரங்க ஒங்க வரி வெளக்க பத்தி கேட்டாங்ளாம்,அமீரும் மன்ஸ்ல எதுவும் வெக்காம அத்லாம் தேவலனு அவுர் கர்த்த சொல்லிக்றாரு,அதுக்கு அய்யா கருத்தியா எதித்து பேஸ்ரனு ஒங்க அள்ங்க ரவுண்ட் கட்டீட்டாங்ளாமே மெய்யாலுமா?

இந்த டைரஷ்ஷன் யூனியன்காரங்க இன்னும் ஒருதபா மேல போயி அமீர்க்கு ரெட் கார்டு போட்டுட்டாங்க,அத்த கொஞ்ச கேள் தலீவா!பாவம் அமீர் சுற்சுற்னு இர்ப்பார்,இப்ப அலறிப்போயி மெரண்டு போயி கெடக்காரு. ஏன்னா இந்த ஸ்டைல் அட்டாக்ல அந்தம்மா நாக்காலில குந்திக்குனு இர்ந்தப்ப நடந்ததா ஞாபகம்.ஒங்க பேர யார்னா தப்பா பண்ணிடப்போறாங்க உஷார் தலீவா.

ஆனாலும் நீங்க ரொம்ப ஜோரான மேட்டர்லாம் அப்பப்ப பண்றீங்க,செல்வியக்காவ பாக்க பெங்ளுரு வர்ம்போதெல்லாம் "டெக்னிக்கல் பார்க்" ப்க்கம்லாம் லுக் உட்றீங்க,புத்ஸா டைட்ட்ல் பார்க் ஓபன் பண்ண ரூட் போட்றீங்க மெய்யாலும் என்ன்மாறி பசங்ளுக்ளாம் கேக்க குஷியா கீது,இப்ப பெரியாரு அய்யா பொறந்த நாளிக்கு நெலம்லாம் கொட்க்க போறீங்ளாமே...நல்ல மேட்டருதான் அய்யா!,நெலம் கொட்த்தா மட்டும் போறாது வெவசாய வளச்சிக்கி புத்ஸா திட்டம் குட்தீங்னா சூப்பரோ சூப்பர்தான்.இந்த மேட்டர்ல நம்ம வெவசாய வெஞ்ஞானி சாமிநாதன் அய்யாகிட்ட கூட டிஸ்கஸன் பண்ணலாம்.

என்க்கின்னான தலீவரே நம்ம ஊர்ல எல்லாங்கீது நல்ல தலீவ்னத்தவர,நீக்கொஞ்ச ஈகோ பாக்காம மன்சு வெச்சா போறும்,அந்த கொறை தீந்துடும்.

ஒலகத்த பாருங்க சிங்பூர்க்கு ஒரு லீ க்வாங் போல மலேசியாவுக்கு ஒரு மகாதீர் போல நீங்க நம்மூர மாத்திடனும் தலீவ்ரே,இது ஒண்ணால முடியும்,ஒண்ணால மட்டுமெ முடியும்,

என்க்கு தெரியும் ஒங்க மன்ஸல இன்னா கீதுனு..,நம்ம ஸ்டாலின் அண்ணாத்தெ ஃபீச்சர் பத்திதானே,கவலப்படாதீங்க இன்னிக்கு மொள்ச்ச காளாண்லாம் அந்த போஸ்ட்க்கு ஆசப்பட்றப்ப அவுர்க்கு அக்மார்க் தகுதி கீது,இத்த ஏய மாரியாத்தா கோயில்ல சத்தியம் பண்ணி சொல்லக்கூட நாங்ரெடி!

அதனால நீங்க நாட்ட பத்தி கவலப்படுங்க,ஏன்னா நீங்க பண்ணப்போற்த வெச்சிதான் எங்க ஃபீச்சர் மட்டுமில்ல ஸ்டாலின் அண்ணாத்தே ஃபிச்சரும்!

இன்னும் பேச நெறய கீதுதான்,அப்பால பேஸ்லாம்,அதுக்குள்ளாற இந்த கரண் ஜொகர் மாமாவ கண்டுக்கினு வந்துட்றென்,

வர்ட்டா தலீவா..ஹி...ஹி...தாத்தொவ் !

-ராணாமோனா

வணக்கம் வாத்யாரே...!

வணக்கம் வாத்யாரே...!

நல்லா கீரியா..!

இன்னாமா யிது புத்சா கீது யிந்த பத்ரிக்கனுதானே முய்க்கீறே..ஆமா புத்சுதான்! "பேட்டா ராப்"னு பேரு வச்சிருக்கேன் எப்டி கீது?

அப்புறம்.... இன்னாடா இவன்லாம் எய்த ஆரம்பிச்சா நாடு உருப்புடுமானுதானே பாக்குறே....எய்தவேண்டியவங்க ஒய்ங்கா எய்துனா அப்பால நா எதுக்கு பேனா தூக்கணும்..மாமே !

கவல்படாதே நைனா,நம்ம மன்ஸ்ல் அய்க்கில்ல அதால எய்த்லயும் அய்கிருக்காது.

ரொம்ப வருஷத்துக்கு முன்னால் குஜாலா இருந்தேன்.எங்காத்தா டவுனுக்கு போனா முட்டாயி,பிஸ்கோத்துக்கு பதிலா நல்ல கத புஸ்தகமா வாங்கியாரும்.எம் புள்ள பட்ச்சி அறிவாளியாவட்டும்னு அவ்ளொ ஆசை.இப்ப இன்னாடானா திடுப்புனு புஸ்தகம் வாங்கியாரத வுட்ருச்சி !
ஏ...யாத்தானு நான் கேக்கல, ஏன்னா எனக்கே மேட்டர் தெரியுமே...?

இன்னானு கேக்கிறியா?

அட எந்த புஸ்தகமோ பேப்பரோ,ஒரு ரேப் நியுஸ்,ஒரு கீப் நியுஸ் இல்லாம க்கீதா..? எதுவும் இல்லாங்காட்டியும் கூட விட மாட்றீங்கல்ளே...எவளோடயாவது, எவனையோடவாவது சேத்து மேட்ட்ர் பண்ணீடறீங்களே...

நா மேட்டருனு சொன்னது, நீங்க பண்ற நீயுஸதான்.

முன்னலாம் புள்ளைங்க புக்ஸ படிச்சி காமிச்சா பெத்தவங்களுக்கு புல்லரிச்சி போவும், இப்ப இன்னாடானா பேய்யச்சா மாதிரி முய்க்கிறாங்க..,இப்டிதான் எட்டு வயசு எங்கக்கா பையன் ஒரு எழவு புடிச்ச புக்க எழுத்துக்கூட்டி படிச்சிட்டு, ரேப் பண்றதுனா இன்னா மாமானு கேக்குறான்!

ஆண்டவரே ! நான் இன்னா பதில சொல்வேன்.

மக்கா...உம்புள்ள இதே கேள்விய கேட்டா, நீ இன்னா பதில் சொல்வே..இல்ல கத்து கொடுப்பியா?...நீ கத்து குடுத்தாலும் குடுப்பே, ஏன்னா பத்திரிக்கை தர்மத்த ஏற்கனவே அதானே வாத்யாரே பண்ணிகிட்டு கீரே நீ...

யோவ் புண்ணியம் பண்ணவங்ன்களே! முன்னலாம் புள்ளைங்க புக்ஸ படிச்சி காமிச்சா பெத்தவங்களுக்கு வயித்துல பால் வாத்தா மாதிரி இர்க்கும் ! இப்ப நெருப்ப வாக்கறீங்களே..!துட்டு சம்பாரிக்க நம்ம இஸ்பெக்டயே காவு வாங்றீங்ளே ஞாயமா?

அப்பாலலாம் பலான பலான சமாச்சாரங்கள பிரிண்ட் பண்ணி பொஸ்தக கடையில மறைச்சி விப்பாங்க, இப்ப ஊட்டுக்குள்ளாறயே கொண்டாந்து வூடு கட்றீங்களே...! கட்வுளே...கட்வுளே!

இப்பலாம் நம்முர பாத்தா இது தமிழ்நாடா இல்ல தறுதல நாடானு கொயப்பமாவுது வாத்யாரே....!

போனவாரம் பெங்களுர் போயிட்டு மெட்ராஸ் பஸ்டாண்ட வந்து எறங்னா ஒரு போஸ்டரு என்ன கொல நடுங்க வச்சிடுச்சி மாமே....! அட நம்ம ஒலக அய்கி அய்ஸ்வர்யானு பாத்தா முதுக காமிச்சிகிட்டு போஸ் கொடுக்கறா..,

அவள உடுங்க பாவம்! அவ கூத்தாட வந்துட்டு மேட கோணல்னு பாக்க முடியாது...ஆனா அத்க்கு நம்ம ஆளுங்க குட்த்துகிற சப்-டயிட்லு கீதே...ங்கொக்க மக்கா! கொட்த்தவன் பெரீய க்ரீயேட்டிவ் தெலகம்தான்!

அடா...அடா ! பொம்பளைங்களுக்கு நல்லா மருவாதி பண்றீங்கடா....அது என்னப்பா.."ஒரு எளம் வெதவையின் காமத்தாகம்"

டோய்...... நாங்கேக்கிறேன்...எத்தனை வூட்ல எள வய்ஸ்லயே அர்த்துட்டு அன்னாடம் கேவி கேவியே வாய்க்கைய நட்த்தற அக்கா தங்கிச்சிங்க யிர்க்காங்க..அவுங்க மன்சு இன்னா கஸ்டப்படும்னு ரோஸனை பண்ணியாடா கஸ்மாலம்..! வூ வுட்ல ஒர்த்தி இப்டி இர்ந்தா உன்க்கு இப்டி ஒரு சப்-டயிட்லு வெக்க தோண்மா?

செர்தான்....இந்த கண்றாவிலாம் இப்டி கீதேனு வூட்ல டீவி பொட்டிய ஆன் பண்ணா அவனுங்க அமக்ளம் தாங்க முட்ல ! பிரண்ட் பொண்டாட்டிய எப்டி கரெக்ட் பண்றதுனு எபிசொட் போட்டூ சொல்லி தராணுங்க...இல்ல பொறந்த புள்ள கைல வேப்லைய குட்த்து ஆட விட்றானுங்க....கேட்டா ரேட்டிங்ல மொதல்ல வரணுமாம்..! அய்யா பெரியார் அய்யா நீங்க சீக்கிரமே பூட்டீங்க புண்ணியவா..ன் !

இவனுங்கள இன்னாடனு கேட்டா ரேட்டிங்ள பஸ்ட் வர்ணுமாம்...பிஸ்னஸ் போட்டியாம்.
அய்யோ சாமி நீங்க ரேட்டிங்கல மொதல்ல வர்ர ஊரு பூரா ரெட் லைட் போடாதீங்கடா...!

ஊர்க்கு உர்ப்படாத வயி காம்ச்சிட்டு,உம்புள்ளைங்கல மட்டும் ஒஸ்தி ஸ்கூலுல சேத்துடுங்க...நல்லா ஒய்ங்கா வள்ரும்.

யாரோ சொன்து இப்ப நென்ப்ல வர்து வாத்யாரே....மீட்யா நீங்கள்ளாம் சன்நாயகத்தோட நாலாவது தூணாம்!
மத்த தூணுங்க ஆட்டம் கண்டாகூட நீங்தான் தட்டிகேப்பிங்களாம்..இப்ப நீங்ளே ஆட்டம் குட்த்தா யார் தட்டி கேப்பா...? ஒண்ணு மட்டும் மன்சுல வச்சிக்கே மாமே ! உன்க்னு வயசாயிடும்,கொஞ்ச நாள்ல நீ பூடுவே,ஆனா நீ போட்ட ரோட்லதான் உம்புளளைங்க வர்ணும் மாமே,அவுங்க ஜெர்க் ஆவக்கூடாது,நென்ப்ல வெச்சிக்கோ...!

ஆமா! ஆது இன்னா நூறாவது நாள்னு போஸ்டரு எல்லா எட்த்துலயும் மின்க்குது....ஓ..கலீஞர் அய்யா ஒங்க ஆட்சியோட கவுண்ட் ட்வுன்னா அது ! ஒங்கள பத்திக்கூட மன்சுல பேச வேண்டிகீது...இப்ப தன்லட்சுமிக்கு காலேசி விட்ற டைமு...அதால அப்பால வர்றேன்..இப்ப கொஞ்சம் ஜூட்...!


-ராணாமோனா